சினிமா செய்திகள்

இந்த படத்தில் நான் நடிக்கின்றேனா? ஷாக்கிங் டுவிஸ்ட் வைத்த கௌதம் மேனன்!

Published

on

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிப்பில் வினோத்குமார் இயக்க உள்ள ’அன்புசெல்வன் என்ற படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது என்பதும் இந்த அறிவிப்பை இயக்குனர் பா ரஞ்சித், நடிகர் விஷ்ணு விஷால் உள்பட பிரபலங்கள் தங்களுடைய டுவிட்டரில் பதிவு செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென கௌதம் மேனன் இப்படி ஒரு படத்தில்தான் நடிக்கவே இல்லை என்றும் எப்படி இவ்வளவு தைரியமாக புரமோஷன் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கௌதம் மேனன் நடிப்பில் வினோத் குமார் என்பவர் இயக்கத்தில் அன்புச்செல்வன் என்ற திரைப்படம் உருவாகி வருவதாகவும் இந்த படம் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை தமிழ் திரையுலகின் பிரபலங்களான பா ரஞ்சித், விஷ்ணுவிஷால் உள்பட ஒரு சிலர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் புரமோஷன் செய்ததால் அதனை நம்பி பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கெளதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படி ஒரு படத்தில்தான் நடிக்கவே இல்லை என்றும் இந்த படத்தின் இயக்குனர் என்று குறிப்பிட்டு இருக்கும் நபர் யார் என்று எனக்கு தெரியாது என்றும், அவரை நான் நேரில் கூட பார்த்ததில்லை என்றும் பிரபலங்கள் எப்படி இவ்வாறு புரமோஷன் செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை என்றும் கூறியுள்ளார்

இதனை அடுத்து விஷ்ணு விஷால், பா ரஞ்சித் ஆகியோர் தங்களது டுவிட்டுக்களை டெலிட் செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் அன்புச்செல்வன் என்ற திரைப்படம் உருவாகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,.

Trending

Exit mobile version