சினிமா செய்திகள்
3 மகன்களும் சினிமாவை விட ‘இந்தத்’ துறையில் நுழைய வாய்ப்புள்ளது- கெளதம் மேனன்
இயக்குநர் கெளதம் மேனன் முதன்முறையாகத் தனது மகன்கள், குடும்பம் குறித்து மனம் திறந்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இயக்குநர் கெளதம் மேனன் தனது மின்னலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகள் முழுவதுமாக நிறைவடைகிறது. இந்த சூழலில் முதன்முறையாக தனது 3 மகன்கள், குடும்பம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் கெளதம் மேனன்.
கெளதம் மேனன் கூறுகையில், “நான் என் குடும்பம் குறித்துப் பேசாததற்குக் காரணம் எங்களுக்கு அப்படி இருக்கவே பிடித்திருந்தது. எனது பட விழாக்களுக்குக் கூட எனது மனைவி, 3 மகன்கள் என யாருமே வரமாட்டார்கள். ஆனால், எப்போதும் எனது உழைப்புக்கும் எனது வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
சமீபத்தில் ஒரு படத்துக்காக கல்லூரி இளைஞன் தேவைப்பட்ட போது என் மகனிடம் கேட்டேன். ஆனால், அவரது நண்பர்களை என்னிடம் அறிமுகம் செய்தாரே தவிர கேமிரா முன்னாடியில் நிற்க மறுத்திவிட்டார். எனக்குத் தெரிந்து எனது 3 மகன்களும் சினிமா துறைக்குள் வர வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாதுதான்.
என்னுடைய இளமை காலத்தில் நான் சினிமாக்கு ஆசைபடுவதற்கு முன்னர் கிரிக்கெட் விளையாடத் தான் ஆசைப்பட்டேன். அந்த ஆசைதான் இப்போது எனது 3 மகன்களுக்கும் தொற்றிக் கொண்டுள்ளது. 3 பேரும் கிரிக்கெட் அபாரமாக விளையாடுவார்கள். தொழில்முறை சார்ந்த கிரிக்கெட் விளையாட்டுத் துறையில் 3 பேரும் கூட போகலாம். அதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது” என்றுள்ளார்.