கிரிக்கெட்

INDvENG- சொதப்பும் கே.எல்.ராகுல்; டிராப் ஆன சூர்யகுமார் யாதவ் – இந்திய அணி நிர்வாகத்தை வறுத்தெடுத்த கம்பீர்!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து, 2 – 1 என்ற ரீதியில் முன்னிலை வகிக்கிறது. 

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி, 77 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பம் முதலே அதிரடி காண்பித்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 18.2 ஓவர்களில் அடைந்தது. 

இந்தியாவைப் பொறுத்தவரை மூன்று ஆட்டங்களிலும் சரியான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்பது அமையவில்லை. இதனால் தொடக்கம் முதலே இந்திய அணி தடுமாறி வருகிறது. மூன்று போட்டிகளிலும் ஓப்பனர்களில் ஒருவராக களமிறங்கியது கே.எல்.ராகுல். இரண்டு போட்டிகளில் டக்-அவுட் ஆகியுள்ள ராகுல், ஒரு போட்டியில் மற்றும் ஒரு ரன் எடுத்தார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஐபிஎல் தொடரில் கலக்கிய சூர்யகுமார் யாதவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்கிற குரல்கள் எழுந்து வருகின்றன. 

அதே நேரத்தில் ஐபிஎல் தொடரில் நன்கு பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவுக்கு, முதல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஒரு போட்டியில் அவர் விளையாடவே இல்லை. மூன்றாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டார். இப்படி அவர் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையான நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், ‘டி20 உலகக் கோப்பை வர இன்னும் 7 மாதங்கள் தான் உள்ளன. அதற்கு முன்னர் உங்கள் அணி குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்த சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்குத் தொடர்ச்சியாக சில போட்டிகள் கொடுத்து எப்படி விளையாடுகிறார் என்பதை சோதிக்க வேண்டும். 

அதை விடுத்து, இப்படி இரண்டு போட்டிகளில் டிராப் செய்வது என்பது சரியான அணுகுமுறையே கிடையாது. இதன் மூலம் நல்ல வீரர்களை நாம் இழப்போம். இன்னொரு பிரச்னை, அணியில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் சூர்யகுமார் யாதவ், எந்த வித முன் அனுபவமும் இல்லாமல் நேரடியாக வந்து விளையாட வேண்டியிருக்கும். இதையெல்லாம் கண்டிப்பாக இந்திய அணி நிர்வாகம் தவிர்க்க வேண்டும். 

இந்தியாவில் திறமையான வீரர்களுக்குப் பஞ்சமே இருக்காது. ஆனால், அவர்களை சரியான வழி நடத்தவில்லை என்றால் பெரும் பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று கூறியுள்ளார். 

Trending

Exit mobile version