விளையாட்டு

1 ரூபாய்க்கு சாப்பாடு… கெளதம் கம்பீர் திறந்த புதிய உணவகம்..!

Published

on

கெளதம் கம்பீர் டெல்லியில் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் 1 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் ஒரு உணவகத்தைத் திறந்துள்ளார்.

முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்குத் தொகுதியின் எம்.பி-யுமான கெளதம் கம்பிர் டெல்லியில் புதிதாக ஒரு உணவகத்தைத் திறந்துள்ளார். அந்த உணவகத்துக்கு ‘ஜன் ரசோய்’ எனப் பெயரிட்டுள்ளார். மக்கள் உணவகம் எனும் வகையில் திறக்கபட்டுள்ள இந்த உணவகத்தில் 1 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது.

அடித்தட்டு மக்களுக்கு உதவும் வகையில் இந்த உணவகத்தைத் திறந்துள்ளார். இங்கு ஒரே நேரத்தில் 50 பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வகையில் இடவசதி செய்யப்பட்டுள்ளது. கெளதம் கம்பீரின் இந்த முயற்சிக்குப் பல தரப்பினர்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதே போல் டெல்லியில் இரண்டு உணவகங்களை கம்பீர் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கம்பீர் கூறுகையில், “நான் அரசியலுக்கு வந்தது நாடகம் நடத்தவோ தர்ணாவில் ஈடுபடவோ அல்ல. மக்களுக்கு உண்மையானதை செய்து கொடுக்கவே அரசியலுக்கு வந்தேன். என்னிடம் இருப்பதைக் கொண்டு மக்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கிறேன். இந்த சேவை என்னோடு நின்று விடாமல் இதுவே ஒரு அமைப்பாக உருவாக வேண்டும் என விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version