தமிழ்நாடு
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு: தமிழக மக்கள் அதிர்ச்சி!
கடந்த 5 மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை உயராமல் இருந்தது என்பது தெரிந்ததே. அவ்வப்போது வர்த்தக சிலிண்டர் மட்டுமே விலை உயர்ந்து வந்த நிலையில் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்தனர்
இந்த நிலையில் சற்று முன்னர் திடீரென வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு சமையல் எரிவாயு ரூபாய் 50 உயர்ந்துள்ளதாகவும் இதனால் சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 965.50 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் பிற நகரங்களில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்ந்ததால் 967 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
5 மாநில தேர்தலுக்கு பின்னரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்ததால் பொதுமக்கள் நிம்மதியில் இருந்த நிலையில் திடீரென தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 50 உயர்த்தியுள்ளது பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது