இந்தியா

மீண்டும் உயர்ந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் 3 முறை!

Published

on

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இந்த மாதம் மட்டும் ஏற்கனவே சமையல் கேஸ் சிலிண்டர் விலை இரண்டு முறை உயர்ந்துவிட்டது. ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்

ஏற்கனவே இந்த மாதம் அதாவது பிப்ரவரி மாதத்தில் ரூபாய் 25 மற்றும் ரூபாய் 50 என இரண்டு முறை 75 ரூபாய் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் 710 ரூபாய் என்றிருந்த சிலிண்டரின் விலை 785 என்று அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்

இந்த நிலையில் ஒரே மாதத்தில் 3வது முறையாக மீண்டும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சிலிண்டரின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் இதனால் சிலிண்டரின் விலை 785 இருந்து ரூ.810 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஒரே மாதத்தில் மூன்று முறை சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி அதிகரிப்பின் காரணமாக ஒரு பக்கம் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உடனடியாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது

 

 

seithichurul

Trending

Exit mobile version