விளையாட்டு

நலமுடன் வீடு திரும்பினார் பிசிசிஐ தலைவர் கங்குலி..!

Published

on

மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சவுரவ் கங்குலி இன்று நலமுடன் வீடு திரும்பினார்.

இந்திய கிரிக்கெட் சங்கமான பிசிசிஐ-ன் தலைவர் பதவியில் உள்ளார் சவுரவ் கங்குலி. சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் மாரடைப்பின் காரணமாக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் மாரடைப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்தார் கங்குலி.

அங்கு அவருக்கு ஆஞ்சியோ அளிக்கப்பட்டு மருத்துவர்கள் மேற்பார்வையில் ஒய்வு எடுத்து வந்தார். கொரோனா பரிசோதனையிலும் தேறி உள்ளார். இதனால் உடல் நலம் சீர் பெற்றதாகத் தெரிவித்து மருத்துவர்கள் கங்குலியை டிஸ்சார்ஜ் செய்தனர். தான் நலமுடன் வீடு திரும்பி உள்ளதாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார் கங்குலி.

கங்குலி உடற்பயிற்சி மேற்கொண்ட போது ஏற்பட்ட அசெளகரியத்தின் காரணமாகத் தான் முதலில் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனியில் பல முக்கிய பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கங்குலியைச் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றனர்.

seithichurul

Trending

Exit mobile version