சினிமா செய்திகள்

உறவுகள் தொடர்கதை: இளையராஜா-கங்கை அமரன் சந்திப்பின் புகைப்படம்!

Published

on

இசைஞானி இளையராஜா மற்றும் அவரது சகோதரர் கங்கை அமரன் ஆகிய இருவரும் கடந்த பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக சந்திக்காமல் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இருவரும் சந்தித்து புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இளையராஜா மற்றும் அவரது மூன்று சகோதரர்களும் சிறுவயதில் ஒற்றுமையாக இருந்தவர்கள் என்பதும் சென்னைக்கு வந்து திரைப்பட வாய்ப்புகளை பெற்று படிப்படியாக முன்னேறியவர்கள் என்பதும் தெரிந்ததே.

இசைஞானி இளையராஜா ஒரு பக்கம் இசை உலகின் ராஜாவாக இருந்து வந்த நிலையில் அவரது சகோதரர் கங்கை அமரன் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்தார்.

இந்த நிலையில் ஒரு சில காரணங்களால் இளையராஜா மற்றும் கங்கைஅமரன் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பேசாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இசைஞானி இளையராஜாவை அவரது சகோதரர் கங்கை அமரன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து கங்கை அமரன் தனது டுவிட்டர் பக்கத்தில் இறையருளுக்கு நன்றி என்றும் உறவுகள் தொடர்கதை என்றும் பதிவு செய்துள்ளார். மேலும் இளையராஜாவை சந்தித்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version