சினிமா
3 நாட்களாகியும் டெல்டாவிற்கு செல்லாத முதல்வர்.. என்ன ஒரு அரசு!
சென்னை: கஜா புயலில் பாதித்த இடங்களை முதல்வர் பழனிச்சாமி இன்னும் பார்வையிடாதது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கஜா புயல் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புயலால் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கஜா புயலால் நாகையில் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை நேற்று பார்வையிட திட்டமிட்டு இருந்தார் முதல்வர் பழனிச்சாமி.
ஆனால் முதல்வரின் இந்த பயண திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நாளை செல்வதாக கூறியுள்ளார். நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை நாளை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.