சினிமா

கஜா புயல் பாதிப்பு.. அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் திடீர் ஆலோசனை!

Published

on

சென்னை: கஜா புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தின் பெரிய பேரிடர்களில் ஒன்றாக கஜா புயல் உருவாகி உள்ளது. இதன் இழப்புகளை சமாளிக்க பல்லாயிரம் கோடிகள் தேவைப்படும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. டெல்டா மிக மோசமான பாதிப்பை சந்தித்து இருக்கிறது. அங்கு மக்கள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கஜா புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் முதல்வர் பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்ய வேண்டிய சீரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்து ஆலோசனை நடக்கிறது.

ஆலோசனையில் துணைமுதல்வர் பன்னீர்செல்வம், உதயகுமார், வீரமணி பங்கேற்றுள்ளனர். அதேபோல் அமைச்சர்கள், அதிகாரிகளும் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version