தமிழ்நாடு
நிவாரண பணிகள் முழுதாக முடியவில்லை.. முதல்வரின் நாகை பயணம் திடீர் ரத்து!
கஜா புயலால் நாகையில் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை பார்வையிட திட்டமிட்டு இருந்த முதல்வர் பழனிச்சாமியின் பயண திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: கஜா புயலால் நாகையில் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை பார்வையிட திட்டமிட்டு இருந்த முதல்வர் பழனிச்சாமியின் பயண திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
![palanisamy-24-1503517768 - Bhoomitoday](https://seithichurul.com/wp-content/uploads/2018/11/palanisamy-24-1503517768-300x225.jpg)
நாகையில் பாதிக்கப்பட்டு இருந்த பகுதிகளை முதல்வர் பழனிச்சாமி பார்வையிட திட்டமிட்டு இருந்தார். இன்று காலை அவர் சென்னையில் இருந்து நாகை புறப்படுவதாக இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் முதல்வர் பழனிச்சாமியின் நாகை பயணம் திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 நாட்கள் கழித்து முதல்வர் நாகை செல்வதாக தகவல் வருகிறது.
நிவாரண பணிகள் முடியாத காரணத்தால் அவரின் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிவாரண பணிகளை வேகமாக முடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார்.