தமிழ்நாடு
கஜாவிற்கு நிவாரணம் வழங்காத வட்டாச்சியர்.. புதுக்கோட்டையில் வாகனத்திற்கு தீ வைப்பு!
புதுக்கோட்டை: கஜா புயலை அடுத்து சரியாக நிவாரண பணிகளை செய்யாத வாட்டாச்சியாரை கண்டித்து புதுக்கோட்டையில் மக்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
வட்டாட்சியர் பாதுகாப்புக்கு வந்த காவல் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காவலர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
![755181-cyclone-gaja (1) - Bhoomitoday](https://seithichurul.com/wp-content/uploads/2018/11/755181-cyclone-gaja-1-300x169.jpg)
இந்த போராட்டம் முற்றவே வட்டாட்சியர் வாகனம், காவல் வாகனம் உட்பட 4 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் வட்டாச்சியர் வேறு வாகனம் மூலம் திரும்பி சென்றார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.