தமிழ்நாடு
கஜாவிற்கு நிவாரணம் வழங்காத வட்டாச்சியர்.. புதுக்கோட்டையில் வாகனத்திற்கு தீ வைப்பு!
புதுக்கோட்டை: கஜா புயலை அடுத்து சரியாக நிவாரண பணிகளை செய்யாத வாட்டாச்சியாரை கண்டித்து புதுக்கோட்டையில் மக்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
வட்டாட்சியர் பாதுகாப்புக்கு வந்த காவல் வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காவலர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த போராட்டம் முற்றவே வட்டாட்சியர் வாகனம், காவல் வாகனம் உட்பட 4 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் வட்டாச்சியர் வேறு வாகனம் மூலம் திரும்பி சென்றார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.