தமிழ்நாடு

எல்லாம் போச்சு.. முடங்கியது மன்னார்குடி.. போராட்டத்தில் குதித்த மக்கள்!

Published

on

மன்னார்குடி: மன்னார்குடியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் கேட்டும், மீட்பு பணிகளை துரிதமாக செய்ய கோரியும் சாலை மறியல் செய்து வருகிறார்கள்.

டெல்டா மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கஜா புயல் மொத்தமாக புரட்டி போட்டு உள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மன்னார்குடியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. மீட்பு பணிகளில் அரசின் மெத்தன போக்கை கண்டித்து மறியல் நடந்து வருகிறது.

மன்னார்குடியில் 4 நாட்களாக தண்ணீர், மின்சாரம் இல்லை. அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுற்றியுள்ள எந்த கிராமங்களிலும் மின்சார வசதி இல்லை. அரசு மருத்துவமனையில் கூட  மின்சார வசதி இல்லை. இதனால் மக்கள் அங்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version