தமிழ்நாடு

கஜா பாதிப்பு.. 4 மாவட்டங்களில் மதுபான கடைகளை மூட உத்தரவு!

Published

on

தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா பகுதியில் 4 மாவட்டங்களில் டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கஜா பாதிப்பு அதிகம் உள்ள 4 மாவட்டங்களில் மதுபான கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த நேரத்தில் மதுவில் பணத்தை செலவு செய்ய கூடாது என்றும், பாதுகாப்பு கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மறுஅறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் இயங்காது.

இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குனர் கிரிலோஸ்கர் வெளியிட்டார். இந்த நடவடிக்கை டெல்டா பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அருகாமையில் உள்ள மற்ற மாவட்ட மக்களும் இதே கோரிக்கையை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version