தமிழ்நாடு

கஜா புயலுக்கு எதிராக களமிறங்கும் கூகுள்.. மக்களுக்கு கரம் கொடுத்தது!

Published

on

சென்னை: கஜா புயல் பற்றி அனைத்து விவரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ள வசதியாக கூகுள் சிறப்பு பக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

கஜா புயல் இன்று கரையை கடக்க உள்ளது. கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்.

கஜா புயலால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னை,கடலூர், நாகை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக கூகுள் களமிறங்கி உள்ளது.

கஜா புயல் பற்றி அனைத்து விவரங்களையும் மக்கள் தெரிந்து கொள்ள வசதியாக கூகுள் சிறப்பு பக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளது. gaja storm என்று கூகுளில் சர்ச் செய்தால் முதல் பதிலாக கூகுள் பக்கம்தான் திறக்கும். அதே சமயம் மக்கள் ” https://bit.ly/2DziHab ” என்ற பக்கத்திற்கு சென்றும் அந்த தகவல்களை பெறலாம். இதில் கஜா புயல் குறித்து புதிய தகவல்கள் அனைத்தும் கிடைக்கும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version