தமிழ்நாடு
கஜாவால் பேரழிவை சந்தித்த டெல்டா.. பெரும் இழப்பு.. நிலைகுலைந்த வாழ்வாதாரம்!
தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகப்பெரிய பேரழிவை சந்தித்து இருக்கிறது. அங்கு மக்கள் பெருமளவில் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
கஜா புயல் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயல்பு வாழ்க்கை மொத்தமாக நசிந்து போய் உள்ளது.
தற்போது தமிழகம் முழுக்க இதற்காக மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த புயலால் 7 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி, வேதாரண்யம், வேளாங்கண்ணி, பட்டுக்கோட்டை, மதுக்கூர், கும்பகோணம், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.