தமிழ்நாடு
கஜா புயல்.. சென்னை, புதுவையில் கடல் சீற்றம்.. மக்கள் பீதி
![download (4) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/download-4.png)
சென்னை: கஜா புயலால் சென்னையில் சில இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் பீதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த புயலால் கடலோர மாவட்டங்கள்தான் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அங்குதான் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எண்ணூர் அருகே உள்ள சின்ன குப்பம், பெரிய குப்பம் கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் பீதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
கஜா புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரி கடற்கரை சாலை மூடபட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மக்கள் கடல் சீற்றத்தை பார்க்க வந்தனர். கடல் சீற்றத்தை பார்க்க வரும், பொதுமக்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள்.