தமிழ்நாடு

7 மாவட்டங்கள் முடங்கியது.. தீவிரம் அடைந்தது கஜா புயல்

Published

on

சென்னை: கஜா புயல் காரணமாக தமிழ்கத்தில் 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

கஜா புயல் தமிழகத்தை வேகமாக நெருங்கி வருகிறது. கஜா புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது.

கஜா புயல் இன்று அதி தீவிர சூறாவளி புயலாக மாறியது. 25 கிமீ வேகம் வரை இந்த புயல் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூடியுள்ளது.

தற்போது கஜா காரணமாக 7 மாவட்டங்களில் தனியார், அரசு பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version