தமிழ்நாடு
கஜாவால் டெல்டாவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.. மத்தியக்குழு அதிர்ச்சி
தஞ்சாவூர்: கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு செய்ய சென்ற மத்தியகுழு கூறியுள்ளது.
கஜா புயலால் தமிழகம் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. மிக முக்கியமாக டெல்டா மாவட்ட மக்கள் பேரிழப்பை சந்தித்து இருக்கிறார்கள்.
கஜா புயல் சேதம் குறித்து தமிழகம் வந்திருக்கும் மத்திய ஆய்வுக்குழு ஆய்வு செய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட புயல் பாதித்த மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பு குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக இந்த ஆய்வு நடந்து வருகிறது. முதல் நாள் புதுக்கோட்டையில் ஆய்வு செய்தனர். நேற்று தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் பகுதிகளில் மத்தியக்குழு ஆய்வு செய்தது.
ஆனால் உள்கிராமங்களில் மத்தியக்குழு ஆய்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கடைசியாக நாகை மற்றும் காரைக்காலில் ஆய்வு செய்கிறார்கள்.