இந்தியா

இந்தியாவை கண்காணிக்க போகும் ஆங்கிரி பேர்ட்.. விண்ணில் பாய்ந்த இஸ்ரோ ஜி சாட் 7ஏ!

Published

on

சென்னை: இன்று விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ள ஜி சாட் 7ஏ செயற்கைகோள் ஆங்கிரி பேர்ட் செயற்கைகோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது.

இந்த வருடம் வரிசையாக இஸ்ரோ நிறைய செயற்கைகோள்களை விண்ணில் ஏவியது. நிறைய விதமான பயன்பாடுகளுக்காக விண்ணில் சாட்டிலைட்டுகள் ஏவப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஜிசாட் 7ஏ சாட்டிலைட் விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஜிஎஸ்எல்வி எஃப் 11 மூலம் இந்த சாட்டிலைட் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இன்று மாலை 4.10 மணிக்கு இது விண்ணை நோக்கி பாயும்.

இந்தியா கிரியோசனிக் எஞ்சின்களை தனியாக உருவாக்க தொடங்கியதில் இருந்து 1000 கிலோவிற்கு அதிகமான எடை கொண்டு சாட்டிலைட்டுகளை கூட எளிதாக விண்ணில் நிறுத்துகிறது. அதன்படி தற்போது கிரியோசனிக் எஞ்சின் கொண்ட ஜிஎஸ்எல்வி எஃப் 11 என்ற நான்காம் தலைமுறை ராக்கெட் மூலம்தான் ஜிசாட் 7ஏ சாட்டிலைட் விண்ணில் ஏவப்படுகிறது.

Trending

Exit mobile version