Connect with us

இந்தியா

உபி மாநிலத்தில் திடீர் லாக்டவுன் அறிவிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி

Published

on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஒரு சில கட்டுப்பாடுகள் மற்றும் நோய் தடுப்பு ஊசி போடுவதை அதிகரிக்கலாம் என்றும் லாக்டவுன் தேவையில்லை என்றும் அம்மாநில உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் திடீரென உத்தரப்பிரதேச மாநிலத்தில் சற்றுமுன் லாக்டவுன் குறித்த அறிவிப்பு வெளி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வார இறுதி நாட்களில் அதாவது வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை லாக்டவுன் என உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் ஊரடங்கு திங்கட்கிழமை காலை 7 மணிவரை அமல்படுத்தப்படும் என்றும் இந்த ஊரடங்கு நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி என்றும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது

அதேபோல் முழு ஊரடங்கும் போது பழம், பூ கடைகள் உள்ளிட்ட எந்த கடைகளும் திறக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் வியாபாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் அதிகம் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது

வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை முழு ஊரடங்கு என்பதால் இரண்டு நாட்கள் முழுவதும் வீட்டிலேயே பொதுமக்கள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிப்பு உள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு அவர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா27 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்51 நிமிடங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு3 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!