இந்தியா

நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு: அண்டை மாநிலத்தில் அதிரடி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள கர்நாடகாவில் நாளை முதல் முழு ஊரடங்கு என்றும் இந்த முழு ஊரடங்கு 14 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் கொரோனா வைரஸ் மிக வேகமெடுத்து உள்ளதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு என்றும் இந்த முழு ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதன் பின்னர் கடைகளும் அடைத்து இருக்க வேண்டும் என்றும், பொதுமக்களும் வெளியே வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில அரசு எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அடுத்தே கர்நாடக மாநில அரசின் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதே போன்ற முழு ஊரடங்கு நடவடிக்கையை தமிழக அரசு நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version