தமிழ்நாடு

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு

Published

on

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு நேர ஊரடங்கின் போது கடைகள் உணவகங்கள் வணிக வளாகங்கள் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை என்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போதும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version