இந்தியா

டிசம்பர் மாதத்திற்கான இலவச தரிசன டோக்கன் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்!

Published

on

டிசம்பர் மாதத்திற்கான இலவச டோக்கன் வழங்கப்படுவது எப்போது? என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் இந்த டோக்கன்கள் ஒவ்வொரு மாதத்திற்கும் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நவம்பர் மாதம் முடிவடைந்துள்ள நிலையில் டிசம்பர் மாதத்திற்கான இலவச டோக்கன் நாளை முதல் ஆன்லைனில் வழங்க இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தினந்தோறும் 2000 டோக்கன்கள் வீதம் நாளை காலை 9 மணி முதல் தேவஸ்தான இணையதளம் மூலம் வழங்கப்பட உள்ளதாகவும் டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் நாளை முதல் ஆன்லைனில் இலவச டோக்கன்களுக்கு பதிவு செய்து கொள்ளலாம் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதேபோல் நாளை மறுநாள் முதல் தங்கும் அறைகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தங்கும் அறைகளையும் ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் இலவச டோக்கன் வைத்திருந்தாலும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் திட்டவட்டமாக கூறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version