தமிழ்நாடு
நாளை முதல் சென்னையின் முக்கிய பேருந்து நிலையம் மாற்றம்!
நாளை முதல் சென்னையின் முக்கிய பேருந்து நிலையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள் உயர்நீதிமன்ற பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இட நெருக்கடியால் பேருந்து உள்ளே செல்வதற்கும் வெளியே செல்வதற்கும் கஷ்டமாக இருந்தது என்பதும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள் என்பதால் உயர்நீதிமன்ற பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் நாளை முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
நாளை அதாவது ஜனவரி 5ஆம் தேதி முதல் பிராட்வே பேருந்து நிலையம் சென்று பேருந்துகளில் பயணிகள் பயணம் செய்யலாம் என்றும் பேருந்துகளை இயக்க நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் வழக்கமான நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.