தமிழ்நாடு
நாளை முதல் பேருந்து சேவை தொடக்கம்: மக்கள் மகிழ்ச்சி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாகத் தான் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் உள்ளிட்ட போக்குவரத்து தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்பதும், கொரோனா வைரஸ் விதிமுறைகளை பயணிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை முதல் அதாவது அக்டோபர் 1ஆம் தேதி முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஏசி பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஏசி பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே ஏசி பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாளை முதல் மீண்டும் ஏசி பேருந்துகள் எங்கே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் பத்தாம் தேதி முதல் ஏசி பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில் நான்கு மாதங்கள் கழித்து தற்போது ஏசி பேருந்துகள் மீண்டும் இயங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள 702 ஏசி பேருந்துகள் இயக்குவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும், மாநிலத்திற்கு உள்ளும் மாநிலத்திற்கு வெளியேயும் இந்த ஏசி பேருந்துகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.