தமிழ்நாடு

இன்று முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்: விரைவில் திறக்கப்படுகிறதா?

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் சூழல் இருப்பதாக தெரிகிறது

நேற்று தமிழகத்தில் சுமார் 2000 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்பதும், குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது சிகிச்சைகள் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

அந்தவகையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிகளுக்கு வருகை தந்து நிர்வாக பணிகளில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு சுருக்கெழுத்து நிலையங்கள் 50 சதவீத மாணவர்கள் உடன் செயல்பட அனுமதி என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து பணிகள் தொடங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதனை அடுத்து விரைவில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version