சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட சூர்யா: இன்று முதல் படப்பிடிப்பு!

Published

on

சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் அவரது ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சூர்யா தகுந்த சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் காரணமாக தற்போது முழுமையாக குணமாகி விட்டார். இதனை அடுத்து இன்று முதல் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் ‘சூர்யா 40’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பதும் சூர்யா இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பை இயக்குனர் பாண்டிராஜ் முடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் இன்று முதல் நடைபெறும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்ள உள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சத்யராஜ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவில் இருந்து முழுவதும் குணமான நடிகர் சூர்யா இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாகும்.

Trending

Exit mobile version