தமிழ்நாடு
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் போது எவை எல்லாம் செயல்படும்?
![MODI - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/03/MODI.webp)
கொரோனா எதிரொலியாக, வைரஸ் தாக்கம் வேகமாகப் பரவுவதைத் தடுக்கு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி எந்த அத்தியாவசிய சேவை எல்லாம் நாள முதல் கிடைக்கும் என்று தெரிவிக்கவில்லை. ஆனால் பின்னர் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, எந்த சேவையெல்லாம் நாளை முதல் கிடைக்கும் என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
நாளை முதல் இந்த சேவை எல்லாம் கிடைக்கும்:
1) பெட்ரோல் & டீசல்
2) பால்
3) கேபிள் டிவி
4) மளிகை பொருட்கள்
5) காய்கறி அங்காடிகள்
6) அச்சு – காட்சி ஊடகங்கள்
7) கேஸ் ஏஜன்சி
8) காப்பீட்டு நிறுவனங்கள்
9) மருந்தகங்கள் / மருத்துவமனைகள்
10) வங்கி சேவை
11) ரேஷன் கடைகள்
12) அம்மா உணவகங்கள்
13) மருத்துவமனை – வீடு டாக்சி சேவை
14) டெலிகாம் சேவைகள்
ஆனால், இந்த சேவைகளை எல்லாம் பெற செல்லும் போது, கூட்டம் கூடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.