தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இன்று முதல் தீப்பெட்டி விலை உயர்வு! பொதுமக்கள் அதிருப்தி!
தமிழ்நாட்டில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தீப்பெட்டி விலை உயரும் என ஏற்கனவே சிவகாசி தீப்பெட்டி உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்த நிலையில் இன்று முதல் தீப்பெட்டி விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை இதுவரை ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய் என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் உற்பத்தி பொருட்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்பளம் ஆகியவை உயர்ந்துள்ளதை அடுத்து தீப்பெட்டி விலை உயர்த்த முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இதுவரை ஒரு ரூபாயாக விற்பனையாகிக் கொண்டிருந்த தீப்பெட்டி விலை இன்று முதல் இரண்டு ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே காய்கறிகள் உள்பட பல பொருள்களின் விலை உயர்ந்த நிலையில் தற்போது தீப்பெட்டி விலையும் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.