சினிமா செய்திகள்

இன்று முதல் புதிய ஸ்டுடியோவில் இளையராஜா: முதல் பாடல் யாருக்கு?

Published

on

இன்று முதல் புதிய ஸ்டூடியோவில் தனது ஒலிப்பதிவு பணிகளை கவனிக்க இருக்கும் இளையராஜா பிரபல இயக்குனருக்கு முதல் பாடலை ஒலிப்பதிவு செய்யவுள்ளார்

இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகிகளுக்கும் இடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டூடியோவில் வைத்திருந்த ஒலிப்பதிவு கூடத்தை சமீபத்தில் இளையராஜா காலி செய்தார்

இதனை அடுத்து அவர் இன்று முதல் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்எம் பிரிவியூ தியேட்டரில் புதிய ஒலிப்பதிவு ஸ்டுடியோவை அமைத்துள்ளார். இந்த ஸ்டுடியோவின் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் அந்த ஸ்டூடியோவில் ஒலிப்பதிவை இளையராஜா தொடங்கவுள்ளார்

இன்றைய முதல் நாளில் முதல் பாடலாக சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக அவர் பாடல்களை ஒலிப்பதிவு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் புதிய ஸ்டுடியோவில் பணிகளைத் தொடங்கும் இளையராஜாவுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

seithichurul

Trending

Exit mobile version