தமிழ்நாடு
4 நாட்கள் டாஸ்மாக் மூடப்படும்: குடிமகன்களுக்கு அதிர்ச்சியான செய்தி!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் அதற்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது என்பதும் தெரிந்ததே.
மேலும் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று வரும் 19-ஆம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பது குடிமகன்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்று முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யவும் மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் தடையை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.