Connect with us

இந்தியா

இன்று முதல் டிஜிட்டல் கரன்ஸி .. எந்தெந்த வங்கிகளில் கிடைக்கும்? எப்படி பயன்படுத்தலாம்?

Published

on

சில்லறை பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கரன்ஸி இன்று முதல் அமலுக்கு வருகிறது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் கரன்ஸி வெளியிடப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.

முதல்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் நாட்டில் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவை குறைக்கும் நோக்கத்தில் இந்த டிஜிட்டல் கரன்ஸி வெளியிடப்படும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள ஸ்டேட் பாங்க், ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி வங்கி ஆகிய வங்கிகளில் முதல் கட்டமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுவதாகவும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எப்.சி வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகிய வங்கிகளில் இன்னும் ஒரு சில நாட்களில் டிஜிட்டல் கரன்ஸி அனுமதிக்கப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் கரன்ஸிக்கும் கிரிப்டோகரன்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தனிநபர் இடையிலும் வணிகர்கள் இடையிலும் இந்த டிஜிட்டல் கரன்ஸியை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உட்பட சர்வதேச அளவில் கிரிப்டோகரன்சி புழக்கம் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கி பல்வேறு மோசடிகளை தவிர்ப்பதற்காக இந்த டிஜிட்டல் கரன்ஸியை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் அச்சமின்றி இந்த டிஜிட்டல் கரன்ஸியை பயன்படுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் கரன்ஸி அமலுக்கு வருவதால் காகித கரன்ஸி அச்சடிக்கும் செலவு மிச்சமாகும் என்றும் இந்த டிஜிட்டல் கரன்ஸியை செல்போன் செயலி மூலமாகவும் பயன்படுத்த முடியும் என்றும் ஆன்லைன், ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இன்று முதல் வெளியாகும் டிஜிட்டல் கரன்ஸியை மக்கள் எவ்வாறு வரவேற்க போகிறார்கள்? இதன் சாதகம் மற்றும் பாதகங்கள் என்ன என்பதை வரும் நாட்களில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!