இந்தியா

ஜனவரி 1-ம் தேதி முதல் பேருந்து நிலையம், திரை அரங்குகள் செல்ல கொரோனா தடுப்பூசி கட்டாயம்?

Published

on

ஹரியானாவில் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு இரண்டு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு இருப்பது கட்டாயம் என அம்மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

எனவே ஜனவரி 1-ம் தேதி முதல் ஹரியானாவில் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், ஷாப்பிங் மால், திரை அரங்குகள் மற்றும் வங்கிகள் செல்லும் போது மக்கள் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் போட்டு இருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானவை சுற்றியுள்ள மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி அதிகளவில் போடப்பட்டுள்ளது. அதனைச் சரி செய்து கொரோனா தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா அரசின் இந்த முடிவுக்குப் பலர் எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version