Connect with us

இந்தியா

ரூ.22,000 கோடி மோசடி செய்த நிறுவனத்திற்கு மீண்டும் ரூ.1,688 கோடி கொடுத்து ஏமாந்த வங்கிகள்!

Published

on

ஏற்கனவே வங்கிகளில் ரூ.22,000 கோடி மோசடி செய்த நிறுவனத்துக்கு மீண்டும் கடன் கொடுத்த வங்கிகள் மீண்டும் ரூ.1,688 ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில ஆண்டுகளாக பெரிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வங்கிகள் கடன் கொடுத்து வருகின்றன என்பதும் அந்த கடன்களை திரும்ப செலுத்தாமல் பல நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

ஆயிரக்கணக்கான கோடிகளை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் நாட்டை விட்டு தப்பி சென்று விட்ட நிலையில் அவர்களிடம் இருந்து பணத்தை எப்படி வசூல் செய்வது என்று புரியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே 22 ஆயிரம் கோடி ஏபிஜி ஷிப்யார்டு என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கமலேஷ் அகர்வால் என்பவருக்கு கடன் கொடுத்து வங்கிகள் ஏமாந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.1,688 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக கமலேஷ் அகர்வால் மீது வடக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ரூ.22,000 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக ரிஷி கமலேஷ் அகர்வால் என்பவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த மோசடி நாட்டிலேயே மிகப்பெரிய மோசடி என்றும் கூறப்பட்டது. இந்த வழக்கே இன்னும் முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது தவறான தகவல் அளித்து மீண்டும் ரூ.1,688 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் அதன் தலைமையில் கீழ் செயல்படும் சில வங்கிகள் சிபிஐயிடம் புகார் அளித்துள்ளன. இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் கமலேஷ் அகர்வால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே கடன் கொடுத்து மோசடி செய்த நிறுவனத்திற்கு எப்படி வங்கிகள் கடன் கொடுத்தன என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து விசாரிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

சிறிய கடன்களை கொடுத்துவிட்டு அந்த கடனை திரும்ப செலுத்தாத பொதுமக்களை பொதுமக்களிடம் மிரட்டி வசூலிக்கும் வங்கிகள் பெரிய தொழில் அதிபர்களிடம் கோடி கணக்கில் ஏமாந்து வருவது தொடர் கதை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!