தமிழ்நாடு

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்: அசத்தும் செங்கோட்டையன்!

Published

on

9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த 2011-12-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தி வைத்தார். மிகவும் வரவேற்பை பெற்ற இந்த திட்டத்தின்படி முதலில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. அதன் பின்னர் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களையும் இணைக்க முன்மொழிதலை தயாரிக்கும்படியும், அதை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறும்படியும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். இதனை முதன்முறையாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் முன்மொழிந்தார்.

seithichurul

Trending

Exit mobile version