தமிழ்நாடு

வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச வீடு.. இலவசங்களை வாரி வழங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Published

on

தமிழகத்தில் வீடில்லா ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக கட்சி நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் முன்னிட்டு, சென்னை அசோக் நகரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களைப் பட்டியலிட்டார்.

மேலும் சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோ இடையிலான மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைப்பார் என்றும், தமிழகத்தில் ஏழை மக்கள் இல்லாத நிலையை உருவாக்க அதிமுக அரசு போராடி வருகிறது.

தமிழகத்தில் வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச வீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், ரூ.2,500 பொங்கல் பரிசு உட்படப் பல இலவசத் திட்டங்களைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version