உலகம்
கொரோனா 3வது அலை: ஒரு மாதம் முழு ஊரடங்கை அறிவித்த நாடு
இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதாக கூறப்படும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரனோ வைரஸ் மூன்றாவது அலையை தடுப்பதற்காக அந்நாடு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ஏற்கனவே கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி மிகவேகமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் விரைவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் என்றும் அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து மூன்றாவது கொரோனா அலையை முறியடிக்க ஒரு மாதத்திற்கு முழு ஊரடங்கு என அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரன் என்பவர் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மூன்று வாரங்களுக்கு பள்ளிகள் அனைத்தும் விடுமுறை என்றும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
மேலும் அந்நாட்டு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் நோயாளிகளால் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மந்தகதியில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.