உலகம்

ஆப்கன் மக்களுக்கு உதவத் தயார்.. பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு!

Published

on

ஆப்கானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் வரும் மக்களுக்கு உதவத் தயார் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இப்படி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களுக்குப் பிற நாடுகள் ஆதரவு அளித்து அடைக்கலம் வழங்க வேண்டும் என ஐ.நா அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொண்டது.

அதை ஏற்று முதல் நாடாக ஆப்கானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் வரும் மக்களுக்கு உதவத் தயார் என பிரான்ஸ் அரசு ஐ.நாவிடம் உறுதி அளித்துள்ளது.

தொடர்ந்து பிற நாடுகளும் ஆப்கான் மக்களுக்கு உதவுவது குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை மட்டும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றும் முயற்சிகளைச் செய்வது வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version