தமிழ்நாடு

கோவில் மணியை 4 மணி நேரம் தொடர்ந்து அடித்த 4 பெண்கள்: அதிர்ச்சி காரணம்!

Published

on

விழுப்புரம் மாவட்டத்தில் கோவில் மணியை நான்கு பெண்கள் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் அடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோனூர் அருகே தனது குடியிருப்பை காலி செய்யுமாறு மிரட்டியதால் கோவில் மணியை நான்கு பெண்கள் அதிகமாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விழுப்புரம் அருகே கோனூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தான் குடியிருக்கும் வீட்டை அந்த வீட்டின் உரிமையாளர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளார். அதற்கான தொகையை அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்து விட்ட நிலையில் தற்போது பத்திரப்பதிவு செய்து தர வீட்டு உரிமையாளர் மறுத்ததாக தெரிகிறது.

பலமுறை அவர் வீட்டின் உரிமையாளரிடம் வீட்டை பத்திரப்பதிவு செய்து தருமாறு கேட்ட போது வீட்டு உரிமையாளர் கிருஷ்ணன் என்பவர் திடீரென தனது வீட்டை திரும்ப ஒப்படைக்குமாறு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக பணத்தையும் கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் நிலை வந்ததால் வேதனை அடைந்த அந்த வீட்டில் வசித்த 4 பெண்கள் அருகில் உள்ள கோவிலில் 4 மணி நேரம் தொடர்ச்சியாக மணி அடித்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் மணி அடித்தது குறித்த தகவல் அறிந்த தாசில்தார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து இது குறித்து விசாரணை செய்து விரைவில் பத்திரப்பதிவு செய்து கொடுக்க ஏற்பாடு செய்து தருவதாக கூறியதை அடுத்தே நான்கு பெண்கள் கோவில் மணியை அடிப்பது நிறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version