தமிழ்நாடு
சென்னையில் கனமழையால் எந்தெந்த சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன: முழு விபரங்கள்
சென்னையில் நேற்று பல மணி நேரம் பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கன மழை பெய்தால் முதலில் சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகள் தான் வெள்ள நீரில் மூழ்க்ம் என்ற நிலையில் தற்போது நான்கு சுரங்க பாதைகளில் தண்ணீர் இருப்பதை அடுத்து அதில் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மூடப்பட்டுள்ள 4 சுரங்கப்பாதைகள் விவரம் இதோ:
1. துரைசாமி சுரங்கப்பாதை;
2. ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை;
3. மேட்லி சுரங்கப்பாதை;
4. ரங்கராஜபுரம் இரு சக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை
மேலும் ஒரு சில சாலைகளில் அதிக அளவு மழை நீர் தேங்கி உள்ளதை அடுத்து அந்த பகுதியில் மெதுவாக போக்குவரத்து நடைபெற்று வருவதாகவும் எந்தெந்த பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது என்பது குறித்த முழு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. அது குறித்த விவரங்கள் இதோ: