கிரிக்கெட்

ஷேர்வார்னே மரணத்திற்கு 4 பெண்களுடன் உறவு வைத்ததுதான் காரணமா?

Published

on

ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது மரணத்திற்கு அவர் நான்கு பெண்களுடன் உறவு வைத்து தான் காரணம் என்று வதந்தி கிளம்பி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேர் வார்னே, தாய்லாந்து நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

அவரது மரணம் குறித்து தாய்லாந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவரது மரணம் இயற்கையானதா? அல்லது வேறு சில காரணங்களால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஷேர் வார்னே தங்கியிருந்த விடுதியிலிருந்து நான்கு பெண்கள் அவசர அவசரமாக வெளியேறுவது சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்திருப்பதாகவும் இதனால் அவர் நான்கு பெண்களுடன் உறவு வைத்ததால் தான் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கும் என்றும் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் அந்த நான்கு பெண்களும் ஷேர்வானேவுக்கு மசாஜ் செய்ய வந்தவர்கள் என்று தாய்லாந்து காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version