இந்தியா

தமிழ்நாடு பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராக நியமனம்!

Published

on

முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் இருந்து 2 முறை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவார்.

பாஜகவிலிருந்து முதலில் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு இருந்தார். கூடுதலாகப் புதுச்சேரி மாநில ஆளுநராகவும் இவர் உள்ளார்.

இரண்டாவதாக முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் இல கணேசன் மினிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க கூடுதல் பொறுப்பு ஆளுநராகவும் நியமிக்கப்பட்டு இருந்தார். இப்போது உள கனேசான் நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ளார்.

இவர்கள் இருவரையும் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்து 3 முக்கிய பாஜக தலைவர்களுக்கு ஆளுநர் பதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version