இந்தியா
முன்னாள் பிரதமர் தேவகெளடாவுக்கு கொரோனா: டுவிட்டரில் தகவல்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும் அவருடைய மனைவி சென்னம்மாள் என்பவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 97 ஆம் ஆண்டு வரை இந்திய பிரதமராக இருந்தவர் தேவகவுடா. அவர் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருந்து உள்ளார் என்பதும் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேவகவுடாவுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவருடைய மனைவி சென்னம்மாள் என்பவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளதாக தெரிகிறது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு கொரோனா என்ற தகவல் அறிந்ததும் அவருடைய கட்சியினர் அவர் விரைவில் குணமாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.