உலகம்

வானத்தை உடனடியாக பூட்டுங்கள்: மிஸ் உக்ரைன் அழகி வேண்டுகோள்!

Published

on

ரஷ்யா போர் விமானங்களை உக்ரைன் நாட்டிற்குள் நுழைய விடாத வகையில் வானத்தைப் பூட்டுங்கள் என மேற்கத்திய நாடுகளுக்கு முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் விஐபிகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் மிஸ் உக்ரைன் அழகி வெரோனிகா என்பவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். தற்போது தானும் தனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக சுவிட்சர்லாந்தில் உள்ள நண்பர்கள் வீட்டில் இருப்பதாகவும் இங்கு வருவதற்காகு நான்கு நாடுகளின் எல்லையை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார் .

உக்ரைன் நாட்டை ரஷ்யாவிடம் இருந்து பாதுகாக்க உடனடியாக வான்வெளியை மூடுங்கள் என்று மேற்கத்திய நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கொடூரமாக தாக்கி வருவதாகவும் அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் வருத்தத்துடன் கூறியிருந்தார்.

 

Trending

Exit mobile version