தமிழ்நாடு
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!
![Pon Radhakrishnan - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/Pon-Radhakrishnan-1.jpg)
முன்னாள் மத்திய அமைச்சரும், சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டவருமான பொன். ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். அவர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட விஜய் வசந்த் இடம் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பொன்ராதாகிருஷ்ணன் உடல்நிலை குறித்து மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என பாஜக தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.