தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை: பெரும் பரபரப்பு
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய நிலையில் இன்று மீண்டும் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம் நீதி மன்ற துறை அமைச்சராக இருந்தார்
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்பி வேலுமணி வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
எஸ் பி வேலுமணி வீட்டில் மட்டுமின்றி அவருடைய உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மீண்டும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்
கோவையில் உள்ள மைல்கல் என்ற பகுதியில் உள்ள எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்றைய சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்