தமிழ்நாடு
பாஜக-வில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி!
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் முறைப்படி இன்று இணைந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் ஆக பணிபுரிந்து வந்தார். கர்நாடகாவில் அவரை சிங்கம் ஐபிஎஸ் அன்று பட்டை பெயர் வைத்தும் அழைத்து வந்தனர். ஆனால் சென்ற ஆண்டு திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை விவசாயம் சார்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார்.
அண்ணாமலை அடுத்ததாக ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் போது அதில் முக்கிய பொறுப்பில் இருப்பார் என்று கூறப்பட்டு வந்தது. மேலும் அவரது பல பொது பேச்சுக்கள் பாஜகவை ஆதரித்து இருந்து வந்தது,
இந்நிலையில் இன்று பாஜக தேசிய தலைவர் திரு. ஜே.பி.நட்டாவை சந்தித்த அண்ணாமலை முறைப்படி பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜகவில் இணைந்த அண்ணாமலை, “நான் பல வாய்ப்புகளைப் பார்த்தேன்,இறுதியாக பாஜகவில் இணைய முடிவு எடுத்து இருக்கிறேன். தமிழ்நாட்டில் பாஜக வளர உதவியாக இருப்பேன். என்னோட பல ஐடியாக்களில், பாஜக சித்தாந்தம் ஒன்றி இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.