தமிழ்நாடு
தமிழக காங்.பொதுச் செயலாளராக வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நியமனம்!
தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே, ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக, தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இன்று துணைத் தலைவர்கள், பொருளாளர் நிர்வாகிககள் நியமிக்கப்பட்டனர். இதில் மறைந்த எம்பியான வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக கே.எஸ் அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் கே. ஆர் ராமசாமி, சிதம்பரம், மாணிரக்கம், சஞ்சய் தத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் முன்னாள் எம்பி இவிகேஎஸ் இளங்கோவனனும் ஒருங்கிணைப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்கும் குழுவில் ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கேஎஸ் அழகிரி கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். எந்தப் பகுதிகளில் எல்லாம் கட்சி பலவீனமாக உள்ளது என்ற கள நிலவரத்தை அறிந்து கட்சி மேலிடத்திற்கு அனுப்பியுள்ளேன். அதன் தொடர்ச்சியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்’. இவ்வாறு தெரிவித்துள்ளார்.